search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபவிஷ்ட கோணாசனம்"

    உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள். கர்ப்பிணிகள் இந்த ஆசனத்தை செய்து வந்தால் சுகப்பிரசவம் நடைபெறும்.
    பெயர் விளக்கம்: உப விஷ்ட கோணாசனம் என்றால் குறிப்பிட்ட கோணத்தில் அமர்ந்திருக்கும் நிலை என்று பொருள்.

    செய்முறை: தரை விரிப்பின் மேல் கால்களை நீட்டி உட்காரவும். அடுத்து கால்கள் இரண்டையும் முடிந்த அளவு நன்றாக அகற்றி வைக்கவும். தலைக்கு மேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளே இழுத்து உடனே வெளியே விட்டபடி முழங்கால் களின் கீழ்பகுதியை கை விரல்களால் பிடிக்கவும்.

    இந்த ஆசன நிலையில் இருப்பதற்கு சில கர்ப்பிணி களுக்கு சிரமமாக இருக்கலாம். அத்தகையவர்கள் தனக்கு முன்னால் ஒரு முக்காலியை வைத்து அதன்மேல் உள்ளங்கைகளை வைத்துக் கொள்ளலாம். இந்நிலையில் முதுகு சற்று சாய்ந்த நிலையில் நேராக இருக்கட்டும். இது உபவின்ட கோணாசனத்தின் முதல் நிலையாகும். இந்த நிலையில் சாதாரண மூச்சுடன் 5 முதல் 1-0 நிமிடம் நிலைத்திருக்க வேண்டும்.

    5 நிமிடம் கூட நிலைத்திருக்க முடியாதவர்கள் முடிந்த அளவு இருக்கலாம். காலை, மதியம், மாலை வெறும் வயிற்றுடனோ அல்லது உணவு உண்டு 2 மணி நேரம் கழிந்த பிறகோ இந்த பயிற்சியை செய்யலாம்.

    பயிற்சி குறிப்பு: ஒரு நாளில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த ஆசன நிலையில் அமர்ந்திருந்தால் சுகபிரசவம் மிகவும் அனுகூலமாகும்.

    தடைக்குறிப்பு: இந்த ஆசன நிலையில் இருந்து முன்னால் குனியக் கூடாது.

    பயன்கள்: கூபக எலும்பு நன்கு விரிவடையும், இடுப்பு எலும்பு மற்றும் கால் நரம்புகள் வலுவடையும். சுகப்பிரசவம் ஏற்படும். 
    தொடைகள், இடுப்பு, முழங்கால், கழுத்து தசைகளுக்கு பலன் தரும் ஆசனம் இது. இன்று இந்த ஆசனம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    பெயர் விளக்கம்: “உபவிஷ்ட கோணாசனா” என்றால் ஒரு குறிப்பிட்ட கோண நிலையில் உட்கார்ந்து செய்யும் ஆசனம் என்று பொருள்.

    செய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். கால்கள் இரண்டையும் முடிந்தளவு நன்றாக அகற்றி வைக்கவும்.  தலைக்குமேலே இரு கைகளையும் உயர்த்தி மூச்சை உள்ளுக்கு இழுக்கவும்.

    மூச்சை நிதானமாக வெளியே விட்டுக்கொண்டு குனிந்து இடது கால் கட்டை விரலை இடது கை கட்டைவிரல், ஆள்காட்டி விரல், நடு விரல்களாலும், வலதுகால் கட்டை விரலை வலது கை கட்டை விரல், ஆள்காட்டி விரல், நடுவிரல்களாலும் பிடித்து தலையை மேலே உயர்த்தவும்.  கால்களை தூக்கவோ, எந்த ஒரு பக்கமும் சாய்க்கவோ கூடாது.  கண்களால் புருவ மத்தியை பார்க்கவும். இந்த நிலையில் சில முறை மூச்சை இழுத்து விடவும்.

    மூச்சை வெளியேவிட்டு, முன்னுக்கு குனிந்து தலையை தரையை நோக்கி கொண்டுபோய் தாடை தரைவிரிப்பை தொடும்படி வைக்கவும்.  பிறகு நிதானமாக புஜங்களையும், மார்பையும், தரையில் தொடும்படி வைக்கவும்..



    இந்த ஆசன நிலையில் சாதாரண மூச்சுடன் 30 முதல் 60 வினாடி நிலைத்திருக்கவும்.  பிறகு மூச்சை உள்ளுக்கு இழுத்து நிமிர்ந்து படம் 19&ல் உள்ள நிலைக்கு வந்து, அதிலிருந்து தண்டாசன நிலைக்கு வரவும்.  இந்த ஆசனத்தை 2&4 முறை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்தவேண்டிய இடம்:தொடை தசைகள், முழங்கால் பகுதி மீதும், மூலாதாரம் அல்லது சுவாதிஷ்டான சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயிற்சிக் குறிப்பு: ஆரம்பப் பயிற்சியில் இடது, வலது காலை தனித்தனியாக இரு கைவிரல்களால் பிடித்து, இடது பக்கம் சிலமுறை, வலது பக்கம் சிலமுறை என குனிந்து முழங்காலை நெற்றியால் தொட முயலவும். இப்படி சில நாட்கள் பழகிய பிறகு இரு கால் விரல்களையும் கை விரல்களால் பிடித்து முதலில் நெற்றியை தரையில் தொடுவதற்கு பயிற்சி செய்யவும். பிறகு தலையை உயர்த்தி தாடையை தரையில் தொட முயலவேண்டும். இதை நன்கு செய்யமுடிந்த பிறகு நிதானமாக மார்பையும் தரையை தொடும்படி வைக்க முயற்சி செய்ய வேண்டும்.

    பயன்கள்: தொடைகள், இடுப்பு, முழங்கால், கழுத்து தசைகள் பலம் பெறும். கால்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். நீரிழிவு நோயினால் கால்களில் இரத்த ஓட்டம் குறைந்தவர்களுக்கு பயனுள்ளது.

    ×